லிமா ஆஃப்ஷித்
விருதுபெற்ற கவிஞர் மற்றும் எழுத்தாளர். ஆப்கான் கலாச்சாரத்தில் நிலவும் ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளை கேள்வி எழுப்பும் வகையில் இவருடைய கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அமைந்துள்ளன.
இதழியல் படிப்பை முடித்த பின்னர், 5 ஆண்டுகளுக்கும் மேலாக சுயாதீன பத்திரிகையாளராகவும் சமூக கருத்தாளராகவும் இருந்தார்.
ஷெர்-இ-டனேஷ்கஹ் எனப்படும் காபூல் பல்கலைக்கழக கவிதைச் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். பெருந்தொற்றுக் காலத்தில், அச்சங்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு சுகாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், மெய்நிகர் கவிதை அமர்வுகளை நடத்தியதன் வாயிலாக, அவர்களின் சமூக தொடர்பை நிலைநிறுத்த உதவியது.
*இருபது ஆண்டுகளாக நாம் போராடிய அதே சேற்றில் மீண்டும் மூழ்குவது போன்றது ஆப்கானிஸ்தான் வீழ்ச்சி. எனினும், காட்டின் இருளில் ஒளியை நோக்கி நாம் ஒரு கிளையைப் போல உயர முடியும் என நம்புகிறேன்.